BE - 2ம் ஆண்டு சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2018

BE - 2ம் ஆண்டு சேர்க்கை இன்று கவுன்சிலிங் தொடக்கம்!

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு 89 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள் பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரியில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

514 கல்லுாரிகளிலிருந்து இதுவரை 89 ஆயிரம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், 11,164 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

இதனால், விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது. காலை 9:00 மணிக்கு மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினருக்கும், அதை தொடர்ந்து லெதர், பிரின்டிங் பிரிவுக்கும், மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை கெமிக்கல், 3:00 மணி முதல் 4:30 மணி வரை டெக்ஸ்டைல் பிரிவுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.

இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் இளங்கோ, ஒருங்கிணைப்பாளர் கணேசன் கூறியது: கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி