ஆசிரியர் தகுதித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2: பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2018

ஆசிரியர் தகுதித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2: பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் ஜூலை 8, 14 ஆகிய தேதிகளில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெறவுள்ளது.

தொடக்கப் பள்ளி, இடைநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வுவாரியம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான இலவசப் பயிற்சி முகாம், சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் செயல்பட்டு வரும் பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் ஜூலை 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2: தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான 1,600-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பை அடிப்படையாகக் கொண்ட குரூப் 2 தேர்வினை நடத்தவுள்ளது. அதற்கான இலவசக் கருத்தரங்கம், பயிற்சி வகுப்பு ஜூலை 14 -ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த அகாதெமியில் நடைபெறவுள்ளது.

இந்த இலவச கருத்தரங்கங்களில் அந்தந்தத் துறை சார்ந்தவல்லுநர்கள், பேராசிரியர்கள், தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவுள்ளனர். மேலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறைகளை விவரிக்கவுள்ளனர்.

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 044-2661 8056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களிலும், பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்த அகாதெமியின் ஒருங்கிணைப்பாளர் கா.அமுதரசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி