பஸ்களில் செல்லும் சரக்குக்கும் 'இ - வே பில்'கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 24, 2018

பஸ்களில் செல்லும் சரக்குக்கும் 'இ - வே பில்'கட்டாயம்

'பஸ்களில் எடுத்து செல்லப்படும் சரக்குகளுக்கும், இ - வே பில் கட்டாயம்' என, வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
நாடு முழுவதும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலான சரக்குகளை, மாநிலங்களுக்கு இடையே எடுத்து செல்ல, ஆன்லைன் வாயிலாக அனுமதி பெறும், 'இ - வே பில்' நடைமுறை, ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்தது. மாநிலங்களுக்குள், ஒருலட்சம் ரூபாய்க்கு மேலான சரக்குகளை எடுத்து செல்ல, 'இ - வே பில்' பெறுவது, ஜூன் முதல் கட்டாயமாகிஉள்ளது.

இந்நிலையில், பஸ்களில் சரக்கு எடுத்து சென்றாலும், 'இ - வே பில்' பெறுவது கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: லாரிகளில் சரக்குகளை எடுத்து சென்றால் மட்டுமே, 'இ - வே பில்' பெற வேண்டும்; பஸ்களில் சரக்குகளை எடுத்து சென்றால், 'இ - வே பில்' தேவையில்லை என, சரக்குகளை அனுப்புவோரும், நிறுவன உரிமையாளர்களும் நினைக்கின்றனர். இது, முற்றிலும் தவறானது.

லாரி, பஸ் என, எந்த வாகனத்தில் சரக்குகளை எடுத்து சென்றாலும், 'இ - வே' பில் அவசியம்.பலர், 'இ - வே பில்' பெறாமல், சரக்குகளை பஸ்களில் எடுத்து செல்வதாக புகார்கள் வருகின்றன. இது குறித்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.'இ - வே பில்' இன்றி,பஸ்களில் சரக்குகள் சிக்கினால், சரக்கின் மதிப்பை விட, அதிக அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி