மத்திய அரசு ஊழியர்கள், எல்.டி.சி., எனப்படும் விடுமுறையுடன் கூடிய சுற்றுலா பயண சலுகையில், வெளிநாடுகளுக்குச் சென்று வர அனுமதி அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
பரிசீலனை : மத்திய அரசு ஊழியர்களுக்கு, சுற்றுலா செல்வதற்கு, விடுமுறையுடன், பயணக் கட்டணமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் வெளிநாடு செல்லவும் அனுமதி அளிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, ஆசிய நாடுகளுக்கு செல்ல, அனுமதி அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கு பயண சலுகை அளிப்பது தொடர்பாக, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம், மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல, விடுமுறையுடன் கூடிய பயணச் செலவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளில், இந்தியாவின் பங்களிப்பை அதிகப் படுத்துவதற்காக, இந்ததிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி : இந்நிலையில், 'சார்க்' எனப்படும், தெற்காசிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு செல்ல, மத்திய அரசு ஊழியர்களுக்கு, எல்.டி.சி., திட்டத்தில் அனுமதி அளிக்க, கடந்த மார்ச் மாதமே மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர்.
பரிசீலனை : மத்திய அரசு ஊழியர்களுக்கு, சுற்றுலா செல்வதற்கு, விடுமுறையுடன், பயணக் கட்டணமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஊழியர்கள் வெளிநாடு செல்லவும் அனுமதி அளிப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, ஆசிய நாடுகளுக்கு செல்ல, அனுமதி அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கு பயண சலுகை அளிப்பது தொடர்பாக, சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம், மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல, விடுமுறையுடன் கூடிய பயணச் செலவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளில், இந்தியாவின் பங்களிப்பை அதிகப் படுத்துவதற்காக, இந்ததிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அனுமதி : இந்நிலையில், 'சார்க்' எனப்படும், தெற்காசிய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு செல்ல, மத்திய அரசு ஊழியர்களுக்கு, எல்.டி.சி., திட்டத்தில் அனுமதி அளிக்க, கடந்த மார்ச் மாதமே மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. ஆனால், முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி