டாய்லெட் - டச் போன்: ஆபத்து எதில் அதிகம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2018

டாய்லெட் - டச் போன்: ஆபத்து எதில் அதிகம்?



உலகிலேயே மிகவும் அழுக்கான இடம் கழிவறையின் இருக்கைஎன்று நினைத்தீர்களானால் அது தவறு. கழிவறையின் இருக்கையைக் காட்டிலும் ஸ்மார்ட்போனின் தொடுதிரையில்தான் அதிகப்படியான கிருமிகள் இருப்பதாகச் சமீபத்தில் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த Insurance2Go என்னும் நிறுவனம் சமீபத்தில் ஐ-போன் 6, சாம்சங் கேலக்சி 8, கூகுள் பிக்சல் உள்ளிட்ட மொபைல்போன்களின் தொடுதிரையில் அடங்கியுள்ள ஏரோபிக் பேக்டீரியா, ஈஸ்ட் உள்ளிட்ட கிருமிகள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து ஸ்கை.காம் இணையதளத்தில் வெளியாகியிருந்த செய்தியில் கூறியிருப்பதாவது:“சராசரியாக ஒரு ஸ்மார்ட்போனின் தொடுதிரையில் கழிவறைஇருக்கையை விட மூன்று மடங்கு கிருமிகள் அடங்கியிருக்கும். மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமேதுணியைக் கொண்டோ, திரவத்தைக் கொண்டோ அதைச் சுத்தம் செய்கிறார்கள். இருபதில் ஒரு பகுதியினர் தங்களது ஸ்மார்ட்போனின் திரையை ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான்சுத்தம் செய்கின்றனர்.

கழிவறையின் இருக்கை அல்லது ஃப்ளாஷ் டாங்கில் 24 யூனிட் கிருமிகள்தான் இருக்கும். ஆனால், ஸ்மார்ட்போனின் திரையில் சராசரியாக 84.9 யூனிட் கிருமிகள் உள்ளன. ஓர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் கீபோர்டு, மவுசில் கூட 5 யூனிட்தான் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும் ஒரு ஸ்மார்ட்போனில் மட்டும் பின் பகுதியில் 30 யூனிட்களும், லாக் பட்டனில் 23.8 யூனிட்களும், ஹோம் பட்டனில் 10.6 யூனிட்களும் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களின் சுத்தம் செய்யப்படாத தொடுதிரையை அருவருக்கத்தக்க ஒன்றாகக் குறிப்பிடும் இந்த ஆய்வு, அது சுகாதாரம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி