வீடு தேடிவரும் ஆதார் பதிவு செய்யும் வசதி! தமிழக முதல்வரால் தொடக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2018

வீடு தேடிவரும் ஆதார் பதிவு செய்யும் வசதி! தமிழக முதல்வரால் தொடக்கம்!


5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆதார் எண் பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.

 ரூ.13 கோடியே 61 லட்சம் செலவில் 1302 ஆதார் கிட் வழங்கும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கினார்.மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆதாரை பதிவு செய்ய குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் நிரந்தர ஆதார் பதிவு வசதியை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த திட்டத்திற்காக 13கோடியே 61இலட்சம் ரூபாய் செலவில் கணினிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் ஆகியன வாங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவரவர் வீடுகளுக்கே அதிகாரிகள் நேரில் சென்று ஆதார் எண் பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் வாழும் பகுதியில் முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி