பள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக்கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2018

பள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக்கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை


பிளாஸ்டிக் தடை எதிரொலியாக பள்ளிகளில் செயல்வழி கற்றலில் தெர்மாகோல் பயன்படுத்தக் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 1 முதல்பிளாஸ்டிக் தடை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அமலுக்குவருகிறது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் மறுசுழற்சியில் வராத, மக்காத பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம், இந்த திட்டத்தில் தடை செய்யப்படுகிறது. இதற்காக துறை வாரியாக, விழிப்புணர்வு கூட்டங்கள்  நடத்தப்படுகின்றன. அதன்படி, மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நொறுக்கு தீனி, மதிய உணவு போன்றவற்றை பிளாஸ்டிக்  டப்பாக்களில் எடுத்து வரக்கூடாது.

மறுசுழற்சி செய்ய முடியாத, தெர்மாகோல் போன்றவற்றை, வகுப்பறை செய்முறை கற்றலில் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும்1ம் தேதி முதல், பள்ளி வளாகத்தில், பிளாஸ்டிக் இல்லாத, பசுமை  வளாகமாக மாற்ற வேண்டும் என தலைமைஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி