'அரசுப் பள்ளிகளில், தமிழ் வழி கல்விக்கு கட்டணம் இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பெரும்பாலும், தமிழ் வழி கல்வியில் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு, கட்டணம் எதுவும் கிடையாது.
தமிழ் வழி அல்லாத வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், சிறியளவில், ஆண்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதன் விபரம்:அரசுப் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, தமிழ் வழி வகுப்புகளுக்கு, எந்த கட்டணமும் இல்லை.
ஒன்பதாம் வகுப்புக்கு மேல், ஆண்டுக்கு, 50 ரூபாய், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் சார்பில், பராமரிப்பு தொகை வசூலிக்கப்படுகிறது.ஆங்கில வழி கல்வியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 200 ரூபாய்; ஒன்பதாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 250ரூபாய் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2க்கு, 500 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப் படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி