பிளஸ் 1 மாணவர்களுக்கு தினமும் மாதிரி தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2019

பிளஸ் 1 மாணவர்களுக்கு தினமும் மாதிரி தேர்வு


கடந்த ஆண்டை விட, தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வுநடத்தி, அவர்களை தயார் செய்ய வேண்டும்'என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கு, 2018ல், பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பிளஸ் 1 பாடங்களை, பல பள்ளிகள் நடத்தாமல் விட்டதால், இந்த முடிவை, தமிழக பள்ளி கல்வித்துறை மேற்கொண்டது. ஆனாலும், 2018ல் நடந்த பொது தேர்வில், பிளஸ் 1 மாணவர்களின் மதிப்பெண் குறைந்தது. சிலபாடங்களில் தோல்வியுற்ற, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 படிப்பை தொடராமல், 'டிப்ளமா' படிப்புக்கு மாறினர்.

இந்த ஆண்டு, அதுபோன்ற நிலை வந்து விடாமல், மாணவர்கள் தொடர்ந்து, பிளஸ் 2 வரை படிக்கும் வகையிலும், பிளஸ் 1 பொது தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 1 மாணவர்கள் மீது, தனி கவனம் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், 'பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்க, ஒரு மாதமே உள்ள நிலையில், அவர்களுக்கு, தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி, அதிக மதிப்பெண் பெற, தயார்படுத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.'அரசு தேர்வு துறையின், www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள, வினாத்தாள் வடிவமைப்பை, மாணவர்களுக்கு புரிய வைத்து, அதன் அடிப்படையில், கேள்விகளை தயாரிக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி