10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப்.,1-ல் துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2019

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப்.,1-ல் துவக்கம்


பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம், வரும், 29ல், துவங்க உள்ளது.மொழி பாடங்களுக்கு, ஏப்., 6ம் தேதிக்குள்ளும், மற்ற பாடங்களுக்கு, ஏப்., 11ம் தேதிக்குள்ளும் திருத்த பணிகளை முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வுக்கான விடைத்தாள்திருத்தம், ஏப்., 1ல் துவங்க வேண்டும் என, தேர்வுத்துறை உத்தர விட்டு உள்ளது.'மொழி பாடங்கள் மற்றும் முக்கிய பாடங்கள் அனைத்துக்கும் ஒரே நாளில், விடைத்தாள் திருத்தத்தை துவக்கி, ஏப்.,14க்குள் முடிக்க வேண்டும்' என, தேர்வுத்துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி