பள்ளிகளில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க, இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குநர், கருப்பசாமி அனுப்பி உள்ள சுற்றிக்கை:
தொடக்க கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். தொடக்க பள்ளிகளில், ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை, மூன்று பெற்றோர், வட்டார வள மையத்தின் ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், இந்த மையத்தில், உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும்.
எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளில், ஒரு ஆசிரியர், இரண்டு ஆசிரியைகள், மூன்று பெற்றோர், ஒரு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்ஆகியோர், மையத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
இந்த உத்தரவை பின்பற்றி, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு மையம் அமைத்தது குறித்து, இயக்குநரகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி