பிளஸ் 2 பொதுத் தேர்வில், நாகை மாவட்டத்தில் 8 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
நாகை மாவட்டத்தில் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தேர்வு எழுதிய நிலையில், 8 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சநதிக்குளம் கிழக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, புஷ்பவனம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேதாரண்யம் எஸ்.கே.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளி, தோப்புத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, நீடூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கஜாவை கடந்த வெற்றி...
கடந்த ஆண்டில், 2 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதில், 6 பள்ளிகள் கஜா புயல் சீற்றத்தால் கடும் பாதிப்புக்குள்ளான வேதாரண்யம் வட்டத்துக்குள்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Congratulations super,all the best
ReplyDelete