இன்ஜி., கவுன்சிலிங் 87,000 விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 13, 2019

இன்ஜி., கவுன்சிலிங் 87,000 விண்ணப்பம்


இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேருவதற்கு, நேற்று வரை, 87 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி களில் சேர, தமிழக உயர்கல்வித் துறை வாயிலாக, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை சார்பில், ஆன்லைன் மற்றும் ஒருங்கிணைந்த கவுன்சிலிங், ஜூலையில் நடத்தப்பட உள்ளது.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும்மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு, மே, 2ல் துவங்கியது.தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின், https://tneaonline.in என்ற, இணையதளத்தில், மாணவர் விபரங்களை பதிவுசெய்யலாம்.

விண்ணப்ப பதிவு துவங்கி, இதுவரை, 10 நாட்களாகியுள்ள நிலையில், 87 ஆயிரத்து, 33 பேர் பதிவு செய்துள்ளதாக, கவுன்சிலிங் கமிட்டி செயலர், பேராசிரியர் புருஷோத்தமன் அறிவித்துள்ளார். மே, 31 வரையிலும் விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் இருப்பதால், 1.5 லட்சம் பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி