"மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, குழு அமைக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி கல்வித் துறையில், 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகள், 2018 - 19 கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பின்தங்கியது.
கல்வித் துறையை மேம்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், 2019 - 20 கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் தலைமையில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள, 'அம்மா' மாளிகையில், நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், கமிஷனர் பிரகாஷ் பேசியதாவது:மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எவ்வித இடர்ப்பாடும் இன்றி, மகிழ்ச்சி நிறைந்த சூழலை வழங்க வேண்டும். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
கற்றல், கற்பித்தலில் மாறுதல் செய்ய வேண்டும். அனைத்து போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களை தயார்படுத்த வேண்டும். மாநகராட்சி கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களை உள்ளடக்கிய வழிகாட்டுதல் குழு அமைத்து, தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி