தொடக்க கல்வி ஆசிரியர் படிப்புக்கு ஜூன் 28-ல்சேர்க்கை ஆணை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2019

தொடக்க கல்வி ஆசிரியர் படிப்புக்கு ஜூன் 28-ல்சேர்க்கை ஆணை


தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப்படிப்புக்கு ஜூன் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும். அவர்களுக்குவரும் 28-ம் தேதி சேர்க்கை ஆணை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு: 2019-20-ம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, இணைய தளம் மூலம் கடந்த10-ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த விண்ணப் பப் பதிவு வரும் 24-ம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவு பெறும். இதையடுத்து சேர்க்கை ஆணை சம்பந்தபட்டவர்களுக்கு ஜூன் 28-ம் தேதி அனுப்பப்படும். சேர்க்கை ஆணையின் நகல் தேவைப்படு வோர் www.tnscert.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி