தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், தட்கல் மூலம் விண்ணப்பித்தவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) முதல் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இரண்டாம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 14 முதல் 28-ஆம் தேதி வரையிலும், முதலாம் ஆண்டுக்கான தொடக்க கல்வி பட்டயத் தேர்வுகள்ஜூன் 15 முதல் 29-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளன.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களும், தத்கல் மூலம் விண்ணப்பித்தவர்களும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிஆகியவற்றைப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை (ஜூன் 7) முதல் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி