தமிழக அரசின் நலத்திடங்களின் நிதியுதவிக்கான வருமான வரம்பு அதிகரிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2019

தமிழக அரசின் நலத்திடங்களின் நிதியுதவிக்கான வருமான வரம்பு அதிகரிப்பு!


தமிழக அரசின் நலத்திட்டங்களில் நிதியுதவி பெறுவதற்கான உச்ச வருமான வரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக்ததில் ஏழைகளுக்கான திருமண நிதியுதவி திட்டங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த குடும்ப ஆண்டு வருமானத்தின் உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தி மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் கூடுதலாக பயனாளிகள் பயனடைந்து வந்தார்கள்.இந்நிலையில், அரசின் நலத்திட்டங்களில் நிதியுதவிபெறுவதற்கான உச்ச வருமான வரம்பை அதிகரித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அதில், திருமண நிதியுதவி திட்டங்களை போலவே சமூக நலத்துறையின் கீழ் ஏழை விதவைகளின் குழந்தைகளுக்கான இலவச பாடநூல், குறிப்பேடுகள் வழங்கும் திட்டத்திற்கான ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று தொழில் கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் அனுமதி, தையல் பயிற்சிகளில் சேர்க்கை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் சேவை இல்லங்களுக்கும் வருமான உச்ச வரம்பும், மூன்றாம் பாலினத்தவர் நலத்திட்ட உதவி வழங்கும் திட்டங்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.72 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக பயனாளிகள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி