மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஒருபோதும் ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது, அதிக மதிப்பெண் பெறுவதற்காக மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த ப்ளஸ் 2 மாணவர் தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மூன்று பேரையும் விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறையினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி டீக்கா ராமன், மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஒருபோதும் ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது என கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார்.
மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பழக்க வழக்கங்களையும் வளர்க்கும் நோக்கத்தில் ஆசிரியர்கள் வழங்கும் தண்டனை காரணமாக நடைபெறும் தற்கொலைகளை ஆசிரியர்கள் தூண்டியதாக கருத முடியாது என தெரிவித்தார்.தற்போதைய கல்வி முறைப்படி, ப்ளஸ் 2 முதல் கல்லூரி படிப்பு வரை படிக்கும் 15 வயது முதல் 19 வயது வரையிலான மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பதற்காக ஆசிரியர்களின் நடவடிக்கைகள் மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
ப்ளஸ் 1 முதல் கல்லூரி வரை படிக்கும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் மனநிலையை மதிப்பீடு செய்யும் வகையில் திட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை உயர் கல்வித்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி