கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள் - கவிதை ஆசிரியர் சீனி.தனஞ்செழியன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 2, 2019

கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள் - கவிதை ஆசிரியர் சீனி.தனஞ்செழியன்


கல்விப்புத்தாண்டு வாழ்த்துகள்

நாளை முதல் நீங்களின்றி வாடிக்கிடந்த கல்விப்பூங்கா உங்களால் புன்னகைக்கட்டும்

கரும்பலகைகள் கண்சிமிட்ட வெள்ளைக்கவிதைகள் அரங்கேறும்

மேசைகளும் நாற்காலிகளும் உங்கள் வாசத்தால் குதூகலிக்கும்

பிரிதல் கடந்த புரிதலில் நட்புகள் கதை அளாவும்
மைதானங்கள் உங்கள் பாதச்சுவடுகளை பரிசென ஏற்கும்

ஒரு படி முன்னேறிய பேரானந்த பூரிப்பில் இனிதென மத்தாப்பாய் உங்கள் மனம் மலரும்

குழந்தைகளே
உங்களால் சிறக்கட்டும் அறிவுத்திருக்கோயில்

மதிப்பளியுங்கள்
மதிப்புணருங்கள்
சமூகத்தின் சாளரம் திறக்கட்டும் உங்கள் கல்வி

இவ்வருடம் யாவும் புதிது
அத்தனையும் இனிது
பள்ளிக்கல்வித்துறையோ பாங்குற சமைத்தே இருக்கிறது
நற்கல்வி அமுது

நேர்க்கோடு
வளைக்கோடு
இத்தோடு இணைகிறது
உங்களை ஈர்க்கிற பார்கோடு*

நிறைய கற்க
கற்றதன் வழி நிற்க
புத்தகம் கடந்த பெருஞானத்தையும் அள்ளி வந்தளிக்கும் ஆசானை மதித்தொழுகுக

போட்டி சூழ் உலகிது
வெல்லும் வழியறி
தளரா மனங்கொள்
அறிவால் அகிலம் ஆள்


பூமிப்பந்தின் நம்பிக்கைகளே
புதுமை சமையுங்கள்
உடனிருக்கிறோம் நாங்கள்

பாரெங்கும் பரவட்டும் உங்கள் அறிவு சுவாசம்
உச்சம் காணட்டும் உங்களால் இத்தேசம்


வாழ்த்துகளுடன்,

சீனி.தனஞ்செழியன்

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி