மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று (26.06.19) ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச பணிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாகக் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும், அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்துவதில் பல்வேறு மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளது பற்றியும், 20 - 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ள மூத்த ஆசிரியர்களும் இதில் பாதிப்படைந்துள்ளது பற்றியும் எடுத்துக் கூறி இதனைச் சரி செய்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இக்கோரிக்கைகள் குறித்து இயக்குநரை நேரில் அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.
சென்னை.
26.06.2019
பகுதி நேர ஆசிரியர் நிலை?
ReplyDeleteஇரண்டு வருடம் எந்த ஒரு பிரிவிலும் ஒரு ஆசிரியர் பணி கூட போடவில்லை. இதெல்லாம் கேக்க மாட்டீங்க.
ReplyDeleteநீங்க தற்காலிய ஆசிரியரா போனிங்க.எங்களுக்கு எதிரா.நாங்க உங்களுடைய நலனுக்காக போராடினோம்
DeleteSir thappa purijikitiga yegal Pani nirandharapani illa yegala meratti kattayapaduthi velaiku vara vachaga irukara 7000 varumanamum poita naga Nadu theruvuladha nikanum
DeleteTet 2013 2017 candidate amaicharai santhikanum apdi ilana sattamandra kootathodarla yarachum MLA pudichu question keka sollanum
ReplyDeleteNone of the notification was discussed about Tet passed Special teachers.
ReplyDeletePlease part time teacher's kaga support panuga
ReplyDeleteJacto- jio will Give first preparance to spl.parttime teachers..
ReplyDeleteYes please consider part time teacher's
ReplyDelete