இன்றுடன் முடிகிறது இன்ஜி., கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 30, 2019

இன்றுடன் முடிகிறது இன்ஜி., கவுன்சிலிங்


இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்றுடன் முடிகிறது.தமிழகத்தில், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

தொழிற்கல்வி, விளையாட்டு பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் துணை கவுன்சிலிங் பிரிவினருக்கு, நேரடி கவுன்சிலிங்; பொது பிரிவினருக்கு, ஆன்லைன் கவுன்சிலிங்கும் நடத்தப்பட்டுள்ளது.ஜூலை, 3ல் துவங்கிய ஆன்லைன் கவுன்சிலிங், இரு தினங்களுக்கு முன் முடிந்தது.

இதையடுத்து, 28ம் தேதி முதல், துணை கவுன்சிலிங் துவங்கியுள்ளது. இன்றுடன் துணை கவுன்சிலிங்கும் முடிகிறது.ஆகஸ்ட் முதல் வாரத்தில், தனியார் கல்லுாரிகள், நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க, அவகாசம் வழங்கப்படும்.ஆக., 7ல், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முடிவுக்கு வரும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி