விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 9, 2019

விளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி


கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்த, அரசு 64 கோடியே 69 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்று வந்த பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இதில் பரிசுகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், விரைவில் 36 மாணவர்களும், 4 பயிற்சியாளர்களும் ஜெர்மன் நாட்டிற்கு கால்பந்து பயிற்சிபெற அனுப்பப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் கிராமப்புறப்புறங்களில் விளையாட்டை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து செங்கோட்டையன் விளக்கினார்.'கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளைஊக்கப்படுத்த69 கோடியே 64 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் விளையாட்டு பயிற்சி எடுப்பதற்கு பள்ளிகள் வருவாய்த்துறை அலுவலகங்கள் உட்பட அரசு இடங்களில் மாணவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்பொழுது விளையாட்டுத் துறையில் வேலைவாய்ப்பு 3 சதவீதம் உள்ள நிலையில் விரைவில் தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்பது குறித்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்' எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி