சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 'செப்டம்பர் வரை அட்மிஷன்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2019

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 'செப்டம்பர் வரை அட்மிஷன்'


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், செப்டம்பர் வரை, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர் சேர்க்கை, ஏப்ரலில்துவங்கும். பெரும்பாலான பள்ளிகளில், மே மாதம், புதிய வகுப்புகள் துவங்கும் என்பதால், அதற்குள் மாணவர்கள் சேர்ந்து விடுவர்.ஆனாலும், இடமாற்றம் பெறும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் பிள்ளைகளை, பள்ளிகளில் சேர்க்க வசதியாக, ஆகஸ்ட் வரையிலும், மாணவர் சேர்க்கை தொடரும்.இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆகஸ்டில் முடியும் நிலையில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பில் மட்டும், செப்டம்பர் வரையிலும் மாணவர்களை சேர்க்கலாம் என, சி.பி.எஸ்.இ., அனுமதி அளித்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி