TNPSC Group 4 Exam: தேர்வறையில் நீங்கள் எதையெல்லாம் கொண்டு செல்லக் கூடாது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2019

TNPSC Group 4 Exam: தேர்வறையில் நீங்கள் எதையெல்லாம் கொண்டு செல்லக் கூடாது?

அனுமதிக்கப்பட்ட பேனாவைத் தவிர மற்ற  கலர் பேனா மற்றும் பென்சில் போன்றவைகளை முற்றிலும் தவிர்க்கும் மாறும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு கூறுகிறது. 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6.491 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
டிஎன்பிஎஸ்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒரே ஷிப்டில் இத்தேர்வை  நடத்த விருக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் ஆகஸ்ட் 22 அன்று  வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. இதில் பொது தமிழ் / பொது ஆங்கில பிரிவில் 100 கேள்விகளும், திறனாய்வு மற்றும் மன திறன் பிரிவில் 25 கேள்விகளும், பொது அறிவு  பிரிவில் 75 கேள்விகளும் உள்ளடக்கம்.
தேர்வர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:
இந்நிலையில் இத்தேர்வின் கலந்துகொள்ளும் தேர்வர்கள், டி.என்.பி.எஸ்.சி யின் அதிகாரப்பூர்வ  அறிவிப்பின்படி-செல்லுலார் தொலைபேசி, கைக்கடிகாரங்கள்,புளூடூத் சாதனங்களை கொண்டுவர அனுமதிக்கப்படமாட்டார்கள. மேலும், தேர்வர்கள் தங்கள்  வாட்ச் அல்லது மோதிரத்தில் ஏதேனும் மறைமுக வழியில் மின்னணு சாதனத்தை பயன்படுத்தக் கூடாது என்பதும்  டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவுப்பில் சொல்லப்பட்ட ஒன்றாகும் .
புத்தகங்கள்,நோட்டுத் தாள்கள்,துண்டுத் தாள்கள், மின்னணு அல்லது வேறு எந்த வகையான கால்குலேட்டர்கள்,பதிவு அட்டவணைகள், அனுமதிக்கப்பட்ட பேனாவைத் தவிர மற்ற  கலர் பேனா மற்றும் பென்சில் போன்றவைகளை முற்றிலும் தவிர்க்கும் மாறும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பு கூறுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி