காலாண்டு தேர்வில் பிளஸ் 1 வினாத்தாள் 'லீக்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2019

காலாண்டு தேர்வில் பிளஸ் 1 வினாத்தாள் 'லீக்'


பிளஸ் 1 காலாண்டு தேர்வு வினாத்தாள் 'லீக்' ஆனதால் பள்ளிக்கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செப். 12 முதல் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழக பள்ளி கல்வி துறையால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இதில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு காலையிலும் பிளஸ் 1க்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு மையங்களில் வினாத்தாள் தினமும் காலையில் வழங்கப்படுகிறது. பிற்பகலில் நடக்கும் தேர்வுக்கும் காலையிலேயே வினாத்தாள் வழங்கப்படுகிறது.குறைந்த அளவு வினாத்தாளே வழங்கப்படுவதால் பள்ளிகள் தரப்பில் அவற்றை நகல் எடுத்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் 'ஜெராக்ஸ்' கடைகளில் பிரதி எடுக்கின்றனர்.

இந்நிலையில் பிளஸ் 1க்கு நேற்று பிற்பகலில் நடந்த கணினி அறிவியல் தேர்வு வினாத்தாள், நேற்று முன்தினம் வணிகவியல் தேர்வு வினாத்தாளும் வெளியாகிள்ளது.இவைகள் கோவை மாவட்டத்தில் தான் நடந்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி