24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2019

24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு


தமிழக பாட திட்டத்தில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவ பாடமும், முப்பருவ தேர்வும் அமலில் உள்ளன. அதேநேரத்தில், 10 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வும்; மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வும், இந்த மாதம் நடத்தப்படுகின்றன.


இந்த தேர்வுகள், அரசு பள்ளிகளில், வரும், 12ம் தேதி துவங்குகின்றன; தனியார் பள்ளிகளில், இன்று முதல் துவங்க உள்ளன. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையான, சி.சி.இ., திட்டத்தில், பாட திட்டம் சாராத துணை படிப்புகள் கற்று தரப்படுகின்றன. அதாவது, கம்ப்யூட்டர், கலை, உடற்கல்வி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு திறன் வளர்ப்பு படிப்புகள் நடத்தப் படுகின்றன. இவற்றுக்கான தேர்வுகள், இன்று துவங்க உள்ளன.

முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், 12ம் தேதிக்கு பின் நடத்தப்பட உள்ளன.அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்து பள்ளிகளிலும், காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வுகள், வரும், 23ம் தேதியுடன் முடிகின்றன. அதன்பின், தொடர் விடுமுறை அறிவிக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி