15, 16-ந்தேதிகளில் நடக்கிறது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 7-ம் கட்டதேர்வு தென் மண்டலத்தில் 34,272 பேர் எழுதுகிறார்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2019

15, 16-ந்தேதிகளில் நடக்கிறது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 7-ம் கட்டதேர்வு தென் மண்டலத்தில் 34,272 பேர் எழுதுகிறார்கள்


மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம், தேர்வு செய்யப்பட்ட பணியிடங்களுக்கு 7-ம் கட்டமாக கணினி வழி தேர்வினை நடத்த உள்ளது.

தென் மண்டலத்தில் இந்த தேர்வு ஆந்திர மாநிலம் விஜயவாடா, விசாகப்பட்டினம், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் தமிழகத்தில் சென்னை ஆகிய 4 நகரங்களில் உள்ள 11 இடங்களில் வருகிற 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் 11 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை மற்றும் பிற்பகல் 4 மணி முதல் 5 மணி வரை என 3 ஷிப்டுகளில் தேர்வுகள் நடைபெறுகிறது.

தென் மண்டலத்தில் இந்த தேர்வினை எழுதுவதற்கு 34 ஆயிரத்து 272 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் (நுழைவுச்சீட்டு) தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும்.கைக்கெடிகாரம், புத்தகங்கள், காகிதங்கள், பத்திரிகைகள், செல்போன், புளுடூத், ஹெட்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படாது.

தேர்வு எழுதுபவர்கள் இவற்றில் ஏதேனும் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவருடைய தேர்வு ரத்து செய்யப்படுவதோடு, 3 முதல் 7 ஆண்டு காலத்துக்கு தேர்வில் இருந்து ஆணையத்தால் விலக்கியும் வைக்கப்படுவார்கள்.மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய தென்மண்டல இணைச் செயலாளரும், மண்டல இயக்குனருமான கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி