‘இஸ்ரோ’வை பார்வையிட 200 மாணவர்களுக்கு வாய்ப்பு- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2019

‘இஸ்ரோ’வை பார்வையிட 200 மாணவர்களுக்கு வாய்ப்பு- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்


விஞ்ஞானத்தில் சிறந்து விளங் கும் 100 அரசுப் பள்ளி மாணவர் கள் மற்றும் 100 கல்லூரி மாணவர் கள் இஸ்ரோவை பார்வையிட அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.

உலக விண்வெளி வாரத்தை யொட்டி தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஹரிகோட்டா வில் உள்ள இஸ்ரோ விண்வெளி மையம், கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து 3 நாட்கள் இஸ்ரோ விண்வெளி கண்காட்சியை நடத்தின. நேற்று முன்தினம் நடைபெற்ற நிறைவு விழாவில் அமைச்சர் செங் கோட்டையன் கலந்துகொண்டு, பேசியதாவது:
கோபியில் நடந்த இஸ்ரோ விண்வெளி கண்காட்சியை மொத் தம் 45 ஆயிரம் பேர் பார்வையிட் டுள்ளனர். கண்காட்சியையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. விஞ்ஞானத் தில் சிறந்து விளங்கும் 100 அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் 100 கல்லூரி மாணவர்கள் என 200 பேர் இஸ்ரோவின் செயல்பாடுகளை அறிந்துகொள்ள அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இந்த கண்காட்சியில் நடத்தப் பட்ட ஆன்லைன் தேர்வில் முதல் 2 இடத்தை பிடித்த மாணவி கள் கே.வினோதா, எம்.மகிமா சுவேதா ஆகியோர் இஸ்ரோவில் இருந்து ராக்கெட் ஏவும்போது, அதை நேரிடையாக விஞ்ஞானிக ளுடன் அமர்ந்து பார்க்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
இஸ்ரோ உதவி இயக்குநர் கே.பொங்கிணன், வி.ஐ.டி. பல்கலை வேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி