பள்ளி கல்வி அதிகாரிக்கு தேசிய அளவில் பதவி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2019

பள்ளி கல்வி அதிகாரிக்கு தேசிய அளவில் பதவி


சாரணர் இயக்கத்தின் தேசிய ஆலோசகராக, தமிழக பள்ளி கல்வி முன்னாள் இயக்குநர் இளங்கோவன் நியமிக்கப் பட்டுள்ளார்.

பாரத சாரண, சாரணியர் இயக்கமான, 'ஸ்கவுட்ஸ் அண்ட் கெய்ட்ஸ்' இயக்கத்தின், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப் பட்டுள்ளனர். தேசிய அளவில், சாரணர் பிரிவு தலைமை கமிஷனராக, சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த சேத்ரி, சாரணியர்பிரிவு தலைமை கமிஷனராக, மத்திய சுற்றுலா துறை அதிகாரி ரூபிந்தரும் நியமிக்கப் பட்டுள்ளனர். தேசிய அளவில், தலைமையக பொறுப்புகளில், 29 பேர்; தேசிய ஆலோசகர்களாக நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதில், சாரணர் இயக்க வளர்ச்சிக்கான தேசிய ஆலோசகராக, தமிழக சாரணர் இயக்க கமிஷனர் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழக பள்ளி கல்வி இயக்குனராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி