ஆசிரியர் தேர்வு வாரிய பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் சர்ச்சை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2019

ஆசிரியர் தேர்வு வாரிய பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் சர்ச்சை...

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா படிப்பு பட்டியலிடப்படாததால், விண்ணப்பதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,331 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதற்கான அறிவிப்பாணையில் விஷூவல் கம்யூனிகேசன் பிரிவில் 21 இடங்கள், ஜர்னலிசம் பிரிவில் 11 இடங்களும் இடம் பெற்றுள்ளன.
இவற்றுக்கு விண்ணப்பிக்க எம்.எஸ்.சி. விஸ்காம் அல்லது எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா முடித்து பி.எச்.டி. அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது பல்கலைக்கழக மானியக்குழு விதியாக உள்ளது.
ஆனால் டி.ஆர்.பி. இணையதளத்தில் விஷூவல் கம்யூனிகேசன் பாடங்களுக்கு எம்.எஸ்.சி. விஸ்காம் அல்லது எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படியே அறிவிப்பாணை வெளியிடப்பட்டு தேர்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசு அனுப்பிய இணையான படிப்புகள் பட்டியலில் எம்.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா குறித்த தெளிவான வரையறை எதுவும் இல்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source Polimer News

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி