அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிப்பு: தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 15, 2019

அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிப்பு: தமிழக அரசு


தீபாவளி பண்டிகை வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸ் வழங்கப்படும்.

இதன் மூலம் தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3.48 லட்சம் தொழிலாளர்கள் பயன் பெறுவர். லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதமும் வழங்கப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3.48 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.472.65 கோடி போனஸ் வழங்கப்படும்.

வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வாரிய சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். அரசு ரப்பர் கழகம், வனத்தோட்ட கழகம், சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி