வனக்காவலர் பணிக்கான, 'ஆன்லைன்' தேர்வு வினாக்கள், சமூக வலைதளத்தில் வெளியானது தொடர்பாக, வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தில், 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் தேர்வு, கடந்த, 4ல் துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது.
தமிழகம் முழுவதும், 100க்கும்மேற்பட்ட மையங்களில் நடந்த தேர்வில், 1.67 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள், அடுத்தடுத்து, சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இது, தேர்வில் முறைகேடு நடக்க வழி வகுத்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
இதையடுத்து, தேர்வில் பங்கேற்ற யார் யார் வினாத்தாள், 'லீக்' வேலைகளில் ஈடுபட்டனர் என்பது குறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி