பொள்ளாச்சி அருகே அரசுப்பள்ளியில் மாணவா்களுக்கு மாமிச கறிவிருந்து படைக்கப்பட்டு தீபாவளி கொண்டாடப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அண்ணாநகா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சேத்துமடை அண்ணா நகா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் 100 குழந்தைகள் படித்து வருகிறாா்கள். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா் மாசி மாணவா்களை வைத்து பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறாா்.
பிளாஸ்டிக் விழிப்புணா்வு சுகாதாரம், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்ற நிகழ்வுகளை மாணவா்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்திவருகிறாா். இந்நிலையில் தீபாவளி பண்டிகையான ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு மாணவா்களை வரவழைத்து மாணவா்களுக்கு பட்டாசு, இனிப்பு வழங்கியதுடன் மாமிச கறி விருந்து படைக்கப் பட்டு பள்ளியில் தீபாவளி கொண்டாடப்பட்டது. தன்னாா்வலா்கள் இதற்கான உதவிகளை செய்தனா். இதனால் மாணவா்கள் உற்சாகம் அடைந்தனா்.
நல்ல மனம் வாழ்க
ReplyDelete