அண்ணா பல்கலை-க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும் 69% இடஒதுக்கீடு தொடரும்: மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை சார்பில் கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2019

அண்ணா பல்கலை-க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும் 69% இடஒதுக்கீடு தொடரும்: மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை சார்பில் கடிதம்


அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டாலும் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு உயர்த்தும் வகையில் இன்ஸ்டிட்யுஸன் ஆப் எமினன்ஸ் எனப்படும் சிறப்பு அந்தஸ்தை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் மும்பை ஐ.ஐ.டி, சென்னை ஐ.ஐ.டி.,  அண்ணா பல்கலை கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த நிலையில் அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் அங்கு பின்பற்றப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீடு 49.5 சதவிகிதமாக குறைக்கப்படும் என கூறப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு உயர்கல்வித்துறை சார்பில் கடிதமும் எழுதப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும்  இட ஒதுக்கீடு முறை உட்பட அம்சங்களுக்கு  பாதிப்பு ஏற்படாத வகையில் அண்ணா பல்கலை கழகத்தில் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்தை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலை கழகத்தில் சீர்மிகு பல்கலை கழக அந்தஸ்து வழங்கப்பட்டாலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்காது என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

2 comments:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி