Nov 29, 2019
Home
kalviseithi
புதிய மாவட்டங்கள் உதயம் வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன்
புதிய மாவட்டங்கள் உதயம் வாழ்த்துக்கவிதை - ஆசிரியர் திரு சீனி.தனஞ்செழியன்
புதிய உதயங்கள்
வேலூர் தாயின் தொப்புள்கொடியிலிருந்து உயிர்ப்பெற்றது இருமாவட்டக் குழந்தைகள்
புரட்சியின் சொந்தக்காரி போர்க்குண வித்துக்காரி என்பதால்
ஒரே தருணத்தில் இரட்டைக்குழந்தைக்குத் தாயாகி நிற்கிறாள்
வீரம் விளந்த மண்ணில்
இராணியொருத்தி மகுடம் சூட
மலைமுகட்டின் அடியொற்றி திருப்பத்தூரானும் உதயமாகி விட்டான்
இஃதொரு விசித்திர விடியல்
கிழக்கிலும் மேற்கிலுமாய் புதியதோர் உதயம்
இவ்வளவு நாளாய் தாங்கி நின்ற மையப்புள்ளி அவள்
அவளன்பிற்கு என்றுமே வைக்க இயலாது முற்றுப்புள்ளி
இருகண்களின் இடையிலவள் எப்போதும் நெற்றிக்கண்ணே
எங்கள் வேர்நிலம் எப்போதும் வீரம்விளைந்த அவள் மண்ணே
பிள்ளைகள் தழைக்க
வழிகோலிய உனக்கு எங்கள் ஆயிரம் வந்தனங்கள்
நீ
ஒன்றை இரண்டாக்கியவள்
இப்போது
ஒன்றையும் முத்தமிழ்போல் மூன்றாக்கிய வசியக்காரி
தாய்ப்பிள்ளை உறவெப்போதும் மாறாது
இருப்போம் நாங்களும் நன்றி மறவாது
இனிய குழந்தைகளுக்கு இன்று பெயர் சூட்டு விழா
அனைவரும் திரளாய் பங்கெடுப்போம் நம் குடும்ப விழாவில்
புத்தொளி பரவட்டும் நம் அனைவரின் வாழ்வில்
இன்ற வேலூரில் இருந்து இராணிப்பேட்டை, திருப்பத்தூர் புதிய மாவட்டங்களின் உதய விழா
நிறைய அன்புடன்,
சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்.
Recommanded News
Related Post:
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Sir super
ReplyDeleteSir super
ReplyDeleteஅருமை
ReplyDelete