“தேர்வில் தோல்வி அடைந்தால் லேப்டாப் கிடையாது” அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2019

“தேர்வில் தோல்வி அடைந்தால் லேப்டாப் கிடையாது” அரசாணை வெளியீடு


தேர்வில் தோல்வி அடைந்தால் லேப்டாப் கிடையாது என்று அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது.பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது வரை அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2 வகுப்பு முடித்திருந்த சிலருக்கு லேப்டாப் வழங்கும் பணியில் சிறு தொய்வு ஏற்பட்டது. லேப்டாப் உடனே வழங்கக்கோரி ஆங்காங்கே மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில் லேப்டாப் வழங்கும் திட்டத்தில் சில வழிமுறைகளை அரசு கொண்டு வந்துள்ளது. அதுதொடர்பாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, 4 வகையான முன்னுரிமைகளின் கீழ் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் முதல் முன்னுரிமையாக 2019-20-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கும், 2-வதாக 2019-20-ம் கல்வியாண்டில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கும், 3-வதாக 2018-19-ம் ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கும், 4-வதாக 2017-18-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.இதில் முதல் 2 முன்னுரிமைகளில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்பட்டுவிட்டது.அதன் தொடர்ச்சியாக தற்போது 3 மற்றும் 4-வது முன்னுரிமைகளின் கீழ் லேப்டாப் பெற இருப்பவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை சில வழிமுறைகளை பின்பற்ற முடிவு செய்துள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:-

* பாலிடெக்னிக் உள்பட தற்போது படித்து வரும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும்.

* 3 மற்றும் 4-வது முன்னுரிமை பட்டியல்களில் இருக்கும்மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலோ, படிப்பை தொடராமல் இருந்தாலோ அவர்களுக்கு லேப்டாப் வழங்க தேவையில்லை.

* இதன் அடிப்படையில் தான் இனி லேப்டாப் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Iam 2017_18 +2 batch ill fail but ill pass in 2nd attempt so she gave me laptop or not?? Please answer

    ReplyDelete
  2. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி