முதல்வர்களுக்கு, வரும், 8ம் தேதி சிறப்பு ஆலோசனை கூட்டம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2019

முதல்வர்களுக்கு, வரும், 8ம் தேதி சிறப்பு ஆலோசனை கூட்டம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


ஆங்கிலோ இந்திய பள்ளிகளின் முதல்வர்களுக்கு, வரும், 8ம் தேதி சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில், பள்ளி கல்வித்துறையின் கட்டுப் பாட்டில், 50க்கும் மேற்பட்ட ஆங்கிலோ இந்திய பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம், உள் கட்டமைப்பு வசதி மற்றும் இதர செலவுகளுக்கு, அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் ஆசிரியர்களின்எண்ணிக்கை, நிதி உதவியின் அளவு, கல்வி கட்டணம் போன்றவற்றை நிர்ணயிக்கும் வகையில், வரும், 8ம் தேதி சிறப்பு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சென்னை, எழும்பூரில்உள்ள, அரசு பெண்கள் மாதிரி மேல்நிலை பள்ளி வளாகத்தில், இந்த கூட்டம் நடக்கும். இதில், ஆங்கிலோ இந்திய பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி