வட்டார கல்வி அதிகாரியான, பி.இ.ஓ., பதவிக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2019

வட்டார கல்வி அதிகாரியான, பி.இ.ஓ., பதவிக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.


வட்டார கல்வி அதிகாரியான, பி.இ.ஓ., பதவிக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:பள்ளி கல்வித்துறையில் வட்டார கல்வி அலுவலர் பதவியில், 97 காலியிடங்களை நிரப்ப, போட்டி தேர்வு நடத்தப்படும் என, நவம்பர், 27ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். பதிவு செய்ய, ஜன., 9 மாலை, 5:00 மணி வரை அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறைகளின்படி, விண்ணப்பிக்கும் போதே, ஆன்லைன் வாயிலாக சான்றிதழ்களை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

 விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் உண்மை நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே, அறிவிப்பை முழுமையாக படித்து, விதிமுறைகளை தெரிந்து, தேவையான அனைத்து சான்றிதழ்களையும் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.தேர்வு கால அட்டவணை இறுதி நிலையில் உள்ளதால், விண்ணப்பத்துக்கான அவகாசம் நீட்டிக்கப்படாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

5 comments:

  1. I applied for BEO exam but
    One help for doubt sign was not shown properly is it any problem to future

    ReplyDelete
  2. B.sc,B.Ed, computer science complete pannavanga indha exam ku eligible or not

    ReplyDelete
    Replies
    1. Not eligible, only tamil,english,maths,science, social science dept....

      Delete
  3. Ithukkaachum posting poduveengalaadaaaa

    ReplyDelete
  4. Tet ku eppoooo posting poduvinga da...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி