மழையால் பாதித்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் : கோபியில் செங்கோட்டையன் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2019

மழையால் பாதித்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் : கோபியில் செங்கோட்டையன் தகவல்


மழையால் புத்தகங்கள் சேதமடைந்து இருந்தால் உடனடியாக புதிய  புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோபி  அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சி பகுதியில் 1.25 கோடி மதிப்பீட்டில்  சாலை விரிவாக்க பணிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம்  கூறியதாவது:
கோபி பகுதியில் கனமழையால் நெல் பயிர்கள் நோய்  தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு  வழங்குவதற்காக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல. 2021 சட்டமன்ற தேர்தலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

கனமழையால்  புத்தகங்கள் பாதிக்கப்பட்ட அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், உடனடியாக  புதிய புத்தகங்கள் வழங்கப்படும். மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி உடனடியாக  கிடைக்காத நிலையிலேயே பசுமை வீடு பயனாளிகளுக்கு பணம் வழங்க முடியாத நிலை  உள்ளது. உள்ளாட்சி துறை மூலம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  முதியோர் உதவித்தொகையை வங்கி ஊழியர்கள் காலதாமதமாக வழங்குவதாக  புகார் எழுந்துள்ளது. இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று  தாமதம் இல்லாமல் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி