லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது : சிவன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2019

லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது : சிவன்


நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்தரியான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்க 2.1 கி.மீ., தொலைவில், நிலவில் மோதி நொறுங்கியது. 

இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்க இஸ்ரோ பல முயற்சிகளை மேற்கொண்டது. இஸ்ரோவிற்கு உதவியாக அமெரிக்காவின் நாசாவும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. 

இந்நிலையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் அடங்கிய புகைப்படத்தை நாசா நேற்று (டிச.,03) வெளியிட்டது. இதற்கு மதுரையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்பவர் நாசாவுக்கு உதவியதாக, நாசா தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் அளித்த பேட்டியில், இஸ்ரோவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபடித்து விட்டது. இது பற்றி இஸ்ரோ இணையதளத்தில் ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

வேண்டுமானால் நீங்கள் சென்று பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். செப்டம்பர் 10 ம் தேதி இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் இஸ்ரோவின் இந்த தகவலை சரி பார்க்காமல், தாங்கள் லேண்டரை கண்டுபிடித்துள்ளதாக நாசா எவ்வாறு தகவல் வெளியிட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி