அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சம்பள பட்டியல் - ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் சர்வரில் அடிக்கடி பிரச்னை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2019

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சம்பள பட்டியல் - ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் சர்வரில் அடிக்கடி பிரச்னை!


தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சம்பள பட்டியல் விவரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் சர்வரில் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதால் பணிப்பளு ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஒருங்கிணைந்த நிதியியல் மற்றும் மனிதவள மேலாண்மை (ஐ.எப்., ஹெச்.ஆர்.எம்.எஸ்.,) திட்டம் மூலம் ஆசிரியர், அரசு ஊழியர் சம்பளம், சரண்டர், ஈட்டிய விடுப்பு, சேமநல நிதி முன்பண தொகை, பகுதி தொகை உள்ளிட்ட அனைத்து வகை பில்களும் இத்திட்டத்தின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டால் தான் சம்பளம் வழங்கப்படும் என சம்மந்தப்பட்ட கருவூலங்களும் எச்சரித்துள்ளன. ஆனால் விவரங்களை
பதிவேற்றம் செய்வதற்கான சர்வரில் தொடர்ந்து பிரச்னை ஏற்படுவதால் ஒருவரின் பில் விவரம் பதிவேற்றம் செய்ய நான்கு மணிநேரம் வரை ஆகிறது.
இதனால் ரெகுலர் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை என அலுவலர்கள் புலம்புகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:மாநில அளவில் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்களின் மாத சம்பள பட்டியல் விவரத்தை ஆன்
லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என 2018 முதல் கண்டிப்பான உத்தரவிட்டும் பல
மாவட்டங்களில் முழு அளவில் நடைமுறையில் இல்லை. இதற்கு காரணம் சர்வர் பிரச்னை. தொழில் நுட்ப ஆலோசனை வழங்கவும் ஆட்கள் இல்லை.

கருவூலங்களில் இதுகுறித்து கேட்டால் பதில் கிடைப்பதில்லை. இதனால் அலுவலகங்களில் ரெகுலர் பணியுடன் பில்கள் பதிவேற்றம் பணியும் செய்ய வேண்டியுள்ளதால் மனஉளைச்சல்
ஏற்படுகிறது.
ஓராண்டாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி