நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணாக்கர்களின் பெயர் , பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை EMIS - ல் பதிவேற்றம் செய்ய 18 . 11 . 2019 முதல் 29 . 11 . 2019 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது . மேற்குறிப்பிட்டவாறு தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணாக்கரின் விவரங்களையும் சரிபார்த்து , திருத்தம் செய்யும் பணியினை முடித்த பின்பு , தலைமையாசிரியர்கள் , 16 . 12 . 2019 முதல் 30 . 12 . 2019 வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் ( www . dge . tn . gov . in ) சென்று , இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்படும் வழிமுறைகளை பின்பற்றி , மாணாக்கரது விவரங்களை சரிபார்த்து கூடுதல் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .
பள்ளியினை பதிவு செய்தல்
1.தலைமையாசிரியர்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திற்குச் ( www . dge . tn . gov . in ) சென்று Online Portal for School and Educational Offices என்ற வாசகத்தினை click செய்ய வேண்டும் .
2 . அதன் பின்னர் திரையில் தோன்றும் School registration என்ற வாசகத்தினை click செய்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள UDISE Code ( EMIS User ID ) மற்றும் Password - ஐ பயன்படுத்தி , தங்களது பள்ளியின் பெயர் , பள்ளியின் வகை ( Management ) , மின்னஞ்சல் முகவரி , மாவட்டம் போன்ற விவரங்களை பதிவு செய்யவேண்டும் .
3 . School registration - ல் உள்ள பள்ளியின் பெயரே மதிப்பெண் சான்றிதழில் அச்சிடப்படும் என்பதால் பள்ளியின் பெயரை ஆங்கிலத்திலும் , தமிழிலும் சரியாக பதிவேற்றம் செய்யவேண்டும் . பள்ளியின் வகையினையும் ( Management ) சரியாக குறிப்பிடவேண்டும் .
4. மாணாக்கரின் பெயரை தமிழில் பதிவேற்றம் செய்யும் போது , பெற்றோர் / பாதுகாவலர் பெயரையும் முழுமையாக பதிவு செய்தல் வேண்டும் . மாணாக்கரின் பெயர் மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் பெயர்கள் மதிப்பெண் சான்றிதழில் பதியப்படும் என்பதால் அவற்றினை கவனத்துடன் தமிழில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .
குறிப்பு :
ஏற்கனவே NTSE , NMMS மற்றும் + 1 தேர்வுகளின்போது School registration பணியினை மேற்கொண்ட பள்ளிகள் மீண்டும் இப்பணியினை செய்யத் தேவையில்லை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி