TRB - கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான ஆவணங்களை பதிவு செய்ய, கூடுதல் அவகாசம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 4, 2019

TRB - கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான ஆவணங்களை பதிவு செய்ய, கூடுதல் அவகாசம்?


'கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான ஆவணங்களை பதிவு செய்ய, கூடுதல் அவகாசம் தர வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,331 உதவி பேராசிரியர் பணிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதுநிலை டிப்ளமா படிப்பு, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு மற்றும், 'நெட், செட்' போன்றதகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நவம்பர், 15ல் முடிந்தது.இந்நிலையில், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள், அனுபவம் மற்றும் இதர கல்வி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, டிச., முதல் வாரத்தில் அனுமதி அளிக்கப்படும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

தற்போது, டிசம்பர் முதல் வாரம் துவங்கி விட்டதால், அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும், குறைந்த பட்சம் இரண்டு வாரம், ஆவண பதிவேற்றத்துக்கு அவகாசம் தர வேண்டும் என்றும், பட்டதாரிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

1 comment:

  1. அவகாசம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். வாய்ப்பு எவ்வளவு தான் கேப்பிங்க. வேலை தேவை இல்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி