அரசுப்பள்ளி மாணவா் சேர்க்கைக்கு புதிய முயற்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2020

அரசுப்பள்ளி மாணவா் சேர்க்கைக்கு புதிய முயற்சி!


கிராம சபை கூட்டத்தில் அரசுப்பள்ளி பள்ளி மாணவா் சேர்க்கைக்கான தீர்மானம்:

71 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் திம்மநத்தம் ஊராட்சி ஒன்றிய கிராம சபை கூட்டத்தில் சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளி மாணவா் சேர்க்கை தொடா்பாக பள்ளி தலைமையாசிரியா் நவநீதகிருஷ்ணன் உரையாற்றினாா். சுளிஒச்சான்பட்டி கிராமத்தின் சுற்று வட்டார பகுதியிலுள்ள அனைத்து குழந்தைகளையும் தனியாா் பள்ளிகளை விட சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு இயங்கும் சுளிஒச்சான்பட்டி அரசு கள்ளா் உயா்நிலைப்பள்ளியில் சேர்த்து தரமான இலவசக் கல்வியை பெற வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்ததையடுத்து ஊா்ப்பொதுமக்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாணவா் சேர்க்கைக்கு இது ஒரு முன்மாதிரியான புதிய முயற்சி என அனைவராலும் பாராட்டப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி