DEE - 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2020

DEE - 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இயக்குநர் உத்தரவு.


* 26.01.2020 ஞாயிறு அன்று குடியரசு தினவிழாவினை மகிழ்ச்சியும் , எழுச்சியும் மிக்க விழாவாகக் கொண்டாடுதல் வேண்டும் .

* பள்ளி வளாகத்தை வண்ணக் காகிதங்களாலும் , மலர்களாலும் நன்கு அலங்கரித்தல் வேண்டும் .

* தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் .

* கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் , பள்ளி புரவலர்கள் , சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்தல் வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

* மேலும் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்களில் ( Plastics ) உள்ள கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of Flag Code of India 2002 - ன்படி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* மேற்கண்ட விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி குடியரசு தினவிழாவினை அனைத்துப் பள்ளிகளிலும் தவறாமல் சிறப்பாகக் கொண்டாடிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

             - தொடக்கக் கல்வி இயக்குநர்


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி