வீறு கவியரசர் முடியரசனார் நூற்றாண்டை முன்னிட்டு திசம்பர்-1 அன்று தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தனித்திறன் மிக்க மாணாக்கருக்கு 'மாணவ நன்மணி' விருதுகளை காரைக்குடியில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வழங்கி கௌரவித்த மாணவர் செயற்களம் மார்ச்-8 மகளிர் நாள் அன்று அனைத்து வகையான பள்ளி கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் சாதனை மாணவியருக்கு மகளிர் நாள் விருதுகளை வழங்கிப் பாராட்ட உள்ளது.
பேச்சு, எழுத்து, ஓவியம், விளையாட்டு, கலை, அறிவியல், கல்வி ஆகிய துறைகளில் மாவட்ட -மாநில - தேசிய அளவில் சாதித்துவரும் சமூக அக்கறையுள்ள மாணவியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.. தங்கள் பள்ளியில் உள்ள (அ) தங்கள் ஊரிலுள்ள விருதுக்குத் தகுதியானவர்களை பெரியோர், ஆசிரியர்கள் அடையாளப்படுத்தலாம்.. மாணவியரின் சாதனை குறித்த விவரங்களையும் சான்றிதழ் நகல்களையும் சுய விவரக் குறிப்புகளோடு இணைத்து maanavarseyarkalam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும்
9787433006 என்ற புலனத்திற்கும் அனுப்பலாம்.
விண்ணப்பிக்க நிறைவுநாள்:
16-02-2019 ஞாயிற்றுக்கிழமை.
தொடர்புக்கு:
'புரட்சி இளைஞன்' மு.இராகவேந்திரன்- அறிவுரைஞர் (பேசி:9524277025)
'ஓவியக் கவிஞர்'
மு.பிரகாஷ் - மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் (பேசி: 9787433006)
மாணவர் செயற்களம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி