அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணியவேண்டும் - தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2020

அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணியவேண்டும் - தமிழக அரசு உத்தரவு.


அரசு ஊழியர்கள் கண் டிப்பாக புகைப்படத்து டன் கூடிய அடையாள அட்டை அணிய வேண் டும் , இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமி ழக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது .

இதுகுறித்து பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் , துணை செயலாளர்கள் , துறை தலைவர்கள் , மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள உயர் அதிகாரிகள் , டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள் ளார் . அதில் கூறி இருப்ப தாவது : அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண் டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது .

இது தொடர்பாக அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது . ஆனாலும் பலர் அடையாள அட்டை அணிவதில்லை என்று புகார் வந்துள்ளது .

இதுதவ றான நடவடிக்கையாகும் . அதனால் , அந்தந்த துறை தலைவர்கள் தங்கள் துறையின் கீழ்பணியாற்றும் அரசு ஊழியர்கள் புகைப்ப டத்துடன் கூடிய அடை யாள அட்டை அணிவதை உறுதி செய்ய வேண்டும் . அப்படி அணியாதவர் கள் மீது துறை தலைவர் கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி