ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து - இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2020

ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து - இயக்குநரின் செயல்முறைகள்!



தொடக்கக் கல்வி -உதவி பெறும் பள்ளிகள் - பட்டதாரிக் கல்வித்தகுதியுடன் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் நிர்வாகத்தால் 11.07.1995 முதல் 19.051998 முடிய நியமனம் செய்யப்பட்டவர்களில் சில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் ஒப்புதல் கோரி வழக்குகள் தொடரப்பட்டது சார்ந்து -இயக்குநரின் செயல்முறைகள்

1 ) பட்டதாரிக் கல்வித்தகுதியுடன் , இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் , ஒரு மாத கால குழந்தை மனநலப் பயிற்சி முடிக்கப்பட்ட நாளுக்கு மறு நாள் முதல் ஒப்புதல் அளிக்கப்பட்டதை எதிர்த்தும் , தங்களுக்கு நியமன நாள் முதல் ஒப்புதல் அளித்திடக் கோரியும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றனர் . இது அரசாணை ( நிலை ) எண் 155 பள்ளிக் கல்வித்துறை நாள் . 03 . 10 . 2002 க்கு மாறாக உள்ளது . இவ்வாறான வழக்குகளில் துறையால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு பார்வை 2 ல் கண்டவாறு ஏற்றுக் கொள்ளப்பட்டும் , சார்ந்த ஆசிரியர்களால் தொடரப்பட்ட வழக்கு பார்வை 3 இல் கண்டவாறு தள்ளுபடி செய்தும் துறைக்கு சாதகமாக தீர்ப்பாணைகள் பெறப்பட்டன .

2 ) எனவே இக்கோரிக்கை சார்ந்து வேறு பிற ஆசிரியர்களால் வழக்குகள் ஏதேனும் தொடரப்படுமாயின் , பார்வை 2 மற்றும் 3ல் கண்டவாறு உள்ள தீர்ப்பாணைகளை மேற்கோள் காட்டி , வழக்கினை தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பார்வை 4 இல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளின் வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது .

3 ) இதனைத் தொடர்ந்து பார்வை 2 இல் காணும் மேல்முறையீட்டு தீர்ப்பாணையினை எதிர்த்து , மனுதாரர் திரு . எஸ் . சுந்தரவேல்ராஜ் என்பாரால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட சீராய்வு மனு பார்வை 5 இல் கண்டவாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .

4 ) மேலும் , இதேபோன்று , திருநெல்வேலி மாவட்டம் , மேலநீலிதநல்லூர் சரகம் , அத்தாலநல்லூரைச் சார்ந்த திரு . நல்லசிவன் என்பார் , நியமன நாள் முதல் ஒப்புதல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு டபிள்யு . ஏ . எண் 978 / 2016 , 07 . 02 . 2018 அன்று தள்ளுபடி செய்யப்பட்டு துறைக்கு சாதகமாக தீர்ப்பாணைப் பெறப்பட்டுள்ளது . இதனை எதிர்த்து திரு . நல்லசிவன் என்பார் புதுதில்லி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு விடுப்பு மனு பார்வை 6 இல் கண்டவாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது .

5 ) எனவே , பார்வை 4 இல் காணும் சுற்றறிக்கையின் தொடர்ச்சியாக , இக்கோரிக்கை சார்ந்து வேறு பிற ஆசிரியர்களால் வழக்குகள் ஏதேனும் தொடரப்படுமாயின் , பார்வை 5 மற்றும் 6ல் கண்டவாறு உள்ள தீர்ப்பாணைகளை மேற்கோள் காட்டி , வழக்கினை தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இதன் மூலம் மீளவும் அறிவுறுத்தப்படுகிறது .

6 ) மேலும் , இச்செயல்முறைகள் ஆணையினை அனைத்து சார்நிலை அலுலவலர்களுக்கும் சார்பு செய்து அவர்களிடம் ஒப்புகைப் பெற்று கோப்பில் வைக்குமாறும் , இச்செயல்முறைகள் ஆணையினை பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புதலை உடன் அனுப்பிடுமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

இணைப்பு:

பார்வை 5 மற்றும் 6ல் காண் தீர்ப்பாணை நகல் - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி