தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயரத்தினகாந்தி, கலெக்டர் மெகராஜிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்:
தமிழக அரசு புதியதாக ஏற்படுத்தியுள்ள ஐஎப்எச்ஆர்எம்எஸ் என்ற இணையதளம் மூலம், ஆசிரியர்களின் சம்பள பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இணையதளத்தில் அடிக்கடி ஏற்படும் கோளாறு காரணமாக, சம்பள பட்டியலை முழுமையாக தயாரிக்கமுடியவில்லை. இதனால் சம்பளம் பெறுவதில் ஆசிரியர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதை சார் நிலை கருவூல அலுவலர்கள் புரிந்து கொள்ளாமல், புதிய இணையதளத்தில் சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்தால் தான், சம்பளம் வழங்கப்படும் என கூறி வருகிறார்கள். எனவே, சார்நிலை கரூவூலகங்களில் புதிய இணையதளத்தில் உள்ள குளறுபடிகள் சரி செய்யும் வரை, பழைய நடைமுறையை பின்பற்றி, ஆசிரியர்களுக்கு குறித்த நேரத்தில் மாத சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் பள்ளிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் பள்ளியை விட்டு, மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் செல்லும் நாட்களில் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். பள்ளிகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு தனி கம்யூட்டர் வழங்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி