குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2020

குரூப் 1 தேர்வு ஒத்திவைப்பு - TNPSC அறிவிப்பு.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியிடு
 எண் : 21 நாள் : 19 . 03 . 2020

 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் , 20 . 01 . 2020 நாளிட்ட அறிவிக்கை எண் 0112020 ல் தொகுதி 1 பணிகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு 05 . 04 . 2020 அன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தது . |

 சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் தங்கும் விடுதிகள் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக மூடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடு இல்லாத காரணத்தால் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியது இருப்பதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் தேர்வர்கள் மேற்படி தேர்வுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து தேர்வு மையங்களுக்கு பயணிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என தெரிவித்து மேற்படி தொகுதி 1 தேர்வினை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மேலும் , மத்திய அரசு , கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு தேசிய பேரிடராக அறிவிக்கை செய்துள்ளதாலும் , தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுத்துவரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் , தேர்வர்களின் கோரிக்கைகளையும் கருத்திற்கொண்டு 05 . 04 . 2020 அன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த தொகுதி 1 க்கான முதனிலைத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது . இத்தேர்வுகள் நடைபெறும் மாற்று தேதியானது விரைவில் அறிவிக்கப்படும் .

 செயலாளர்

1 comment:

  1. TRB-POLYTECHNIC MATHS & ENGLISH
    One Month Special Training Programme Conducted by
    Polytechnic Exam Cleared staff and Retired Govt Professor
    Highlights This Programme -Given material , Doubt session , Unit wise test, Special care for individual.
    Class starts APRIL 5th
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE.
    CELL -9944500245 (Material available) English only

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி